ஐஎஸ்எல் 2020-21: இரண்டாவது வெற்றியை நோக்கி சென்னை அணி

Update: 2020-11-29 02:28 GMT

கோவாவில் நவம்பர் 20 தொடங்கி நடைபெற்று வரும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசனில் அனைத்து அணிகளும் ஒரு ஆட்டத்தில் விளையாடி முடித்திருக்க இரண்டாவது சுற்று ஆட்டங்கள் தொடங்கியுள்ளன. தங்களது முதல் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப் சி அணியை வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பெற்ற சென்னையின் எப் சி அணி தனது அடுத்த ஆட்டத்தில் கேரளா பிலாஸ்டர்ஸ் அணியினை எதிர் கொள்கிறார்கள்.

முதல் ஆட்டத்தின் வெற்றி தந்த உத்வேகத்தில் களமிறங்கும் சென்னை அணி இந்த ஆட்டத்திலும் வெற்றி பெறும் முனைப்புடன் இருக்கிறார்கள். மேலும் இந்த இரண்டு அணிகள் மோதும் ஆட்டத்தில் எப்போதும் பரபரப்பு இருக்கும் என்பதால் ரசிகர்களும் இந்த ஆட்டத்தைக் கான ஆர்வமாக இருக்கிறார்கள். இரு அணிகளும் மோதிய கடைசி ஆட்டத்தில் ஆறு கோல்களை அடித்து சென்னையின் எப் சி அணி அசத்தியிருப்பதால் தமிழக ரசிகர்கள் அதிக உற்சாகத்தில் உள்ளார்கள், அதே சமயம் கேரளா ரசிகர்களோ தங்கள் அணி பதிலடி கொடுக்குமா என்பதை காணக் காத்திருக்கிறார்கள்.

இதுவரை அடி இரண்டு ஆட்டங்களும் சமனில் முடிந்ததால் இந்த ஆட்டத்தில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். சென்னை அணியோ தங்களது சிறப்பான ஃபார்மினை தக்கவைத்து கொள்ள முற்படுவார்கள். நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கப் போகும் இந்த ஆட்டத்தில் தமிழக ரசிகர்களின் செல்லப் பிள்ளை எட்வின் விளையாட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் படிக்க: ஆஸ்திரேலியா vs இந்தியா கிரிக்கெட் தொடர்களில் நடைபெற்ற சர்ச்சைகள்!