TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

ஆசிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் மேரி கோமிற்கு வெண்கலப் பதக்கம்

ஆசிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் மேரி கோமிற்கு வெண்கலப் பதக்கம்
X
By

Karthiga Rajendran

Published: 11 March 2020 5:56 AM GMT

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குத்துச்சண்டை விளையாட்டுக்கான ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் ஜோர்டனில் தொடங்கி உள்ளது. மார்ச் 3-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள தொடரில் பங்கேற்க இந்திய வீரர் வீராங்கனைகள் ஜோர்டன் விரைந்துள்ளனர்.

இதுவரை, 8 பேர் இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர். விகாஷ் கிருஷ்ணன் (69 கிலோ), அமித் பங்கால் (52 கிலோ), லோவ்லினா (69 கிலோ), மேரி கோம் (51 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), பூஜா ராணி (75 கிலோ ) , ஆஷிஷ் குமார் (75 கிலோ), சதிஷ் குமார் (91 கிலோ) ஆகியோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

ஆசிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்று தொடரின் அரை இறுதிப்போட்டியில் மேரி கோம் விளையாடினார். சீனாவின் வைசாங்கை எதிர்கொண்ட அவர், 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால், மேரி கோமிற்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில், 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் வெற்றி பெற்றுள்ளார். தாய்வானின் சிஹ்-யி-வூவை எதிர்கொண்ட அவர், 4-1 என்ற கணக்கில் போட்டியை வென்றார். இதனால், இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கும் அவர், தங்கப்பதக்கம் வெல்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

[embed]https://twitter.com/BFI_official/status/1237413118436769795[/embed]

75 கிலோ எடைப்பிரிவில் நடந்த அரையிறுதிப் போட்டியில், இந்தியாவின் பூஜா ராணி தோல்வியடைந்தார். இதனால், அவருக்கும் வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

Next Story
Share it