TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

ஆஸி.-இந்தியா பிரிஸ்பேன் டெஸ்ட்: வர்ணனையில் விவாத பொருளான ‘சக்கரை பொங்கல்’

ஆஸி.-இந்தியா பிரிஸ்பேன் டெஸ்ட்: வர்ணனையில் விவாத பொருளான ‘சக்கரை பொங்கல்’
X
By

Ashok M

Published: 17 Jan 2021 6:34 AM GMT

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்கவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸை ஆடி வரும் இந்திய அணி வாஷிங்டன் சுந்தர் மற்றும் சர்தல் தாகூர் ஆகியோரி சிறப்பான ஆட்டத்தால் தடுமாற்றத்திலிருந்து சற்று மீண்டுள்ளது.

தாகூர்-வாஷிங்டன் சுந்தர்

7ஆவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 123 ரன்கள் சேர்த்து அசத்தியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் வாஷிங்டன் சுந்தர் 49 ரன்களுடன் இருந்தப் போது வர்ணனையில் ஹர்ஷா போக்லே, வார்னே உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது ஹர்ஷா போக்லே, “தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அரைசதம் கடந்தால் அவருடைய அம்மா சக்கரை பொங்கல் செய்வார். தற்போது சென்னையில் பொங்கல் பண்டிகை கலகட்டியுள்ளது.

ஹர்ஷா போக்லே

1970-80களில் இந்த நேரத்தில் சென்னையில் பொங்கல் டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது”எனத் தெரிவித்தார். இதற்கு வார்னே, “சக்கரை பொங்கல் என்றால் என்ன?” என்ற கேள்வியை கேட்டார். அதற்கு ஹர்ஷா போக்லே, “அது தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் செய்யப்படும் ஒரு வகை இனிப்பு உணவு” எனப் பதிலளித்தார். பிரிஸ்பேன் டெஸ்டில் சக்கரை பொங்கல் ஒரு விவாத பொருளாக மாறியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பிரிஸ்பேனில் 2003ல் ஆஸி.யை வெளுத்து வாங்கிய கங்குலியை போல் நாளை யார் செய்வார்?

Next Story
Share it