TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

ஒரே நாளில் 5 இந்தியர்கள் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு தேர்ச்சி

ஒரே நாளில் 5 இந்தியர்கள் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு தேர்ச்சி
X
By

Karthiga Rajendran

Published: 9 March 2020 3:16 AM GMT

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குத்துச்சண்டை விளையாட்டுக்கான ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் ஜோர்டனில் தொடங்கி உள்ளது. மார்ச் 3-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள தொடரில் பங்கேற்க இந்திய வீரர் வீராங்கனைகள் ஜோர்டன் விரைந்துள்ளனர்.

இந்திய வீராங்கனைகள் சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), சாக்‌ஷி (57 கிலோ) ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். 75 கிலோ எடைப்பிரிவில் ஆஷிஷ் குமார், 63 கிலோ எடைப்பிரிவில் மனிஷ் கவுசிக், 81 கிலோ எடைப்பிரிவில் சச்சின் குமார், 69 கிலோ எடைப்பிரிவில் விகாஷ் கிருஷ்ணன் ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறியிருந்தனர்.

மேரி கோம்

51 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் மேரி கோம், 52 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட அமித் பங்கல் ஆகிய நட்சத்திர வீரர் வீராங்கனையும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

காலிறுதிக்கு தேர்ச்சி பெற்றுள்ள வீரர் வீராங்கனைகள் இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், ஒலிம்பிக்கில் பங்கேற்பதை உறுதி செய்வார்கள். இதுவரை, 11 இந்திய வீரர் வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்

இதனை தொடர்ந்து, காலிறுதி போட்டிகள் இன்று நடைபெற்றன. 75 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற பூஜா ராணி, தாய்லாந்தின் பூரர்னிப்பாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். 69 கிலோ எடைப்பிரிவில் ஜப்பானின் சிவோன்ரெட்ஸ் ஓகசாவாவை விகாஷ் கிருஷ்ணன் வீழ்த்தினார்.

[embed]https://twitter.com/BFI_official/status/1236587629014962178[/embed]

69 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் லோவ்லினா உஸ்பெக்கிஸ்தான் வீராங்கனை மெலீவாவை வீழ்த்தினார். இவரை அடுத்து, 75 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஆஷிஷ் குமாரும், 91 கிலோ எடைப்பிரிவில் சதிஷ் குமாரும் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

[embed]https://twitter.com/BFI_official/status/1236719272484798464[/embed]

ஒரே நாளில், 5 பேர் இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது சிறப்பாகும். குத்துச்சண்டை விளையாட்டு போட்டிகளின் தகுதிச்சுற்று போட்டிகள் இன்னும் நடைபெற உள்ளதால், மேலும் சில வீரர் வீராங்கனைகள் தேர்ச்சி பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்று தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர் வீராங்கனைகளின் விவரம்:

இந்திய வீரர்கள்: அமித் பங்கல் (52 கிலோ), கவுரவ் சோலாங்கி (57 கிலோ), மனிஷ் கவுஷிக் (63 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ)), ஆஷிஷ் குமார் (75 கிலோ), சச்சின் குமார் (81 கிலோ)), நமன் தன்வார் (91 கிலோ)), சதிஷ் குமார் (91+ கிலோ)

இந்திய வீராங்கனைகள்: மேரி கோம் (51 கிலோ), சாக்‌ஷி (57 கிலோ), சிம்ரன்ஜித் (60 கிலோ), லோவ்லினா (69 கிலோ), பூஜா (75 கிலோ)

Next Story
Share it