12வயதில் மாநில அணி;16 வயதில் இந்திய அணி: அசத்தும் ரிச்சா கோஷ்

Update: 2020-01-18 16:52 GMT

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மிகவும் பிரபலமான இளம் நட்சத்திரம் ஷபாலி வர்மா. ஆனால் அதே அணியில் மற்றொரு இளம் நட்சத்திரம் தற்போது களமிறங்க உள்ளார். அவர்தான் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16-வயது இளம் வீராங்கனை ரிச்சா கோஷ்.

யார் இந்த ரிச்சா கோஷ்? அவரிடம் என்ன ஸ்பெஷல் உள்ளது?

மேற்குவங்க மாநிலம் சிலிகுரி பகுதியைச் சேர்ந்தவர் ரிச்சா கோஷ். இவருடைய தந்தை மனபேந்திர கோஷ் ஒரு கிரிக்கெட் வீரர். மனபேந்திர கோஷ் தனது சிறுவயது முதல் பல கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்தார். எனினும் அவரால் கிரிக்கெட் விளையாட்டில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.

இந்திய மகளீர் கிரிக்கெட் அணி

இதனால் தனது இரண்டாவது மகளான ரிச்சா கோஷின் கிரிக்கெட் ஆர்வத்தைப் பார்த்தவுடன் அவருக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக தந்தை மனபேந்திர கோஷ் இருந்துள்ளார். ரிச்சா கோஷ் தனது கனவு நாயகனாக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கரை பின் தொடர்ந்துள்ளார். அத்துடன் அவர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் சவுரவ் கங்குலியையும் தனது ரோல் மாடலாக நினைத்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துள்ளார்.

தனது

தந்தையின் சிறந்த வழிகாட்டுதாலும்

தனது சிறப்பான திறமையினாலும்

11வயதில்

ரிச்சா மேற்குவங்க மாநில

19வயதுக்குட்பட்டோர்

அணியில் விளையாடி உள்ளார்.

அதில்

சிறப்பாக விளையாடிதால்,

23வயதுக்குட்பட்டோர்

அணியிலும் இடம்பிடித்துள்ளார்.

ரிச்சா கோஷ்

இதனைத் தொடர்ந்து 12வயதில் மேற்குவங்க மாநில மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார். நடுகள வரிசை இடத்தில் களம் இறங்கும் ரிச்சா பேட்டிங், பவுலிங் மற்றும் விக்கெட் கீப்பிங் உள்ளிட்ட அனைத்திலும் பரிட்சயம் பெற்றவர். இவர் சமீபத்தில் நடைபெற்ற சேலஞ்சர் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக ஒரு போட்டியில் 26 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உட்பட 36 ரன்களை விளாசினார். இதன்காரணமாக அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும் இவர் மேற்குவங்க அணியில் விளையாடும் போது இந்திய மகளிர் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோசாமியின் அறிவுரையை பெற்றுள்ளார்.

இந்திய மகளிர் அணியில் தனக்கு வாய்ப்பு கிடைத்ததால் ரிச்சா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். அத்துடன் இதுவரை இந்தியாவிற்கு வெளியே எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் இவர் பங்கேற்காததால் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்.

எனவே இந்த முறை நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இரண்டு சிறுமிகளும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வலுவான ஆஸ்திரேலிய அணியை சந்திக்க உள்ளது. இந்தப் போட்டி வரும் பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்திய மகளிர் அணியின் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி டி20 உலகக் கோப்பையை வென்று வரவேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.