ஏடிபி சேலஞ்சர் பெங்களூரூ 2020: இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற ராம்குமார் மற்றும் புரவ் ராஜா

Update: 2020-02-15 16:34 GMT

ஏடிபி சேலஞ்ர் போட்டிகளில், ஏசியாவிலேயே அதிக பரிசுத்தொகை வழங்கும் போட்டியான ஏடிபி சேலஞ்ர் பெங்களூரு 2020, கேஎஸ்எல்டிஏ டென்னிஸ் மைதானத்தில் பிப்ரவரி 10 முதல் நடைபெற்று வருகிறது. டென்னிஸ் ஜாம்பவானான லியான்டர் பயஸ் இந்தியாவில் விளையாடும் கடைசி போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. அதை கோப்பையுடன் முடிப்பாரா என்பதை காண ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். ஆனால் அந்த எண்ணத்திற்கு எந்த இடமும் கொடுக்காமல் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்கள் ராம்குமார் மற்றும் புரவ் ராஜா. முதல் செட்டினை (6-0) என்ற கணக்கில் வென்றனர்.

இரண்டாவது செட்டிலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர்கள் (6-3) என வென்று பட்டத்தை வென்றார்கள். இது அவர்கள் இருவரும் வெல்லும் மூன்றாவது சேலஞ்சர் கோப்பையாகும். லியான்டர் பயஸ் இந்தியாவில் ஆடும் கடைசி போட்டி தோல்வியில் முடிந்ததால் ரசிகர்கள் வருத்தமடைந்தாலும், மற்றொரு இந்திய இணை வெற்றி பெற்றதால் திருப்தி அடைந்தனர்.