டாட்டா ஓபன்: இது எதிர்பார்க்காத வெற்றி... முதல் சுற்றை வென்ற தமிழக வீரர் பிரஜ்னேஷ்

Update: 2020-02-04 16:22 GMT

டாட்டா மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ்

தொடர் இரண்டாம் நாள் போட்டியில் இந்தியாவின் நம்பர் 1 வீரர் பிரஜ்னீஷ் குணசேகரன்

அசத்தல் வெற்றி பெற்றுள்ளார்.

டாட்டா மகாராஷ்டிரா ஓபன் டேனிஸ் தொடரின் மூன்றாவது சீசன் நடைபெற்று

வருகிறது. தெற்கு ஆசியாவில் நடைபெறும் ஒரே ஏடிபி டென்னிஸ் தொடரான இதில், சர்வதேச டென்னிஸின் முன்னணி வீரர் வீராங்கனைகள் கலந்து

கொள்வர்.

இந்த தொடர் முதன் முதலாக 1996ஆம் ஆண்டு தொடங்கியது. முதலில் இத்தொடர் டெல்லியில்

நடைபெற்றது. பின்னர் அது சென்னைக்கு மாற்றப்பட்டு சென்னை ஓபன் என்று நடைபெற்றது.

அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு புனேவிற்கு மாற்றப்பட்டு

மகாராஷ்டிரா ஓபன் என்ற பெயரை பெற்றது.

இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், இந்தியாவின் பிரஜ்னேஷ் குணசேகரன், ஜெர்மனியின் யன்னிக் மாடென் மோதினர். சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 131-வது இடத்தில் இருக்கும் யன்னிக்கை எதிர்த்து, 122-வது இடத்தில் இருக்கும் பிரஜ்னீஷ் மோதினார்.

போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த பிரஜ்னேஷ், வெற்றி முனைப்போடு விளையாடினார். இந்த போட்ட்டியில், 7(7) – 6(4), 7(7) – 6(5) என்ற செட் கணக்கில் பிரஜ்னேஷ் அசத்தல் வெற்றி பெற்றார். இதன் மூலம், அடுத்து சுற்றுக்கு பிரஜ்னேஷ் முன்னேறியுள்ளார். அடுத்து பிப்ரவரி 6-ம் தேதி நடக்கும் போட்டியில், தென் கொரியாவின் க்வான் சூன் -வூவை எதிர்கொள்ள உள்ளார்.

இன்று நடைபெற்ற மற்றுமொரு ஆண்கள்

ஒற்றையர் பிரிவு போட்டியில், இந்தியாவின் அர்ஜூன் கதே - செக் நாட்டின் ஜிரி வெஸ்லி

மோதினர். இந்த போட்டியில் 2-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் ஜிரி வெஸ்லி வெற்றி

பெற்றார்.

நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டிகளில் இந்தியாவின் நம்பர் 2 வீரர் சுமித் நகல், செர்பியாவின் விக்டர் டிராய்கியை எதிர்த்து விளையாடினர். இந்த போட்டியில், 2-6, 7-6, 1-6 என்ற செட் கணக்கில் போட்டியை இழந்தார். இந்த போட்டியை தோற்றது மூலம், டாட்டா ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து சுமித் நகல் வெளியேறினார்

இதே போல, மற்றொரு ஆண்கள்

ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் நம்பர் 3 டென்னிஸ் வீரர், தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன் விளையாடினர்.

இந்த போட்டியில், இத்தாலியைச் சேர்ந்த சால்வட்டோர்

கருசோவை எதிர்த்து விளையாடினர். இதில், 3-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் ராம்குமார் போட்டியை இழந்தார்.