துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இரட்டையர் பிரிவு காலிறுதியில் பயஸ் - எப்டென் இணை தோல்வி

Update: 2020-02-28 02:53 GMT

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு காலிறுதி போட்டிக்கு இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் இணை தேர்ச்சி பெற்றிருந்தது.

2020-ல் ஓய்வு பெற இருப்பதாக லியாண்டர் பயஸ் அறிவித்துவிட்டார். இதனால், இந்த ஆண்டு அவர் விளையாட இருக்கும் ஒவ்வொரு தொடரும் முக்கியமானது. ஏதாவது ஒரு சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்று, அவருக்கு மகிழ்ச்சியான பிரியாவிடை கொடுக்க வேண்டுமென ரசிகர்களும் காத்திருக்கின்றனர். ஆனால், இதுவரை நடந்த சாம்பியன்ஷிப் போட்டிகள் அவர் தோல்வியைச் சந்தித்து வருகிறார்

நேற்றைய போட்டியில், ஜெர்மனியின் ஹென்ரி கொண்டினென் - ஜன் லென்னார்ட் ஸ்ட்ரஃப் ஆகியோருக்கு எதிர்கொண்டது பயஸ் - எப்டன் இணை. இந்த போட்டியில் 3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் பயஸ் - எப்டன் ஜோடி தோல்வியடைந்தது. இதனால், துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து பயஸ் வெளியேறியுள்ளார்

இதே போல, இந்தியாவில் நடைபெற்ற மகாராஷ்டிரா ஓபன் தொடரின் காலிறுதி போட்டியில் பயஸ் - எப்டென் ஜோடி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இதே இணை அடுத்து பெங்களூரு டென்னிஸ் ஓபன் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. ஆனால், இரண்டு தொடர்களிலும் ராம்குமார் ராமநாதன் - பூரவ் ராஜா இணையிடம் தோல்வியைச் சந்தித்தது