போர்ச்சுகல் லீக் கிளப் அணிக்காக ஒப்பந்தம் செய்துள்ள இந்திய யு-17 உலகக்கோப்பை கால்பந்து அணியின் டிஃபென்டர்

Update: 2020-08-24 15:00 GMT

இந்திய கால்பந்து அணியின் டிஃபென்டர் சஞ்சீவ் ஸ்டாலின் போர்ச்சுகல் நாட்டினைச் சேர்ந்த செர்டநென்செ எப் சி அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த அணி அந்த நாட்டின் மூன்றாவது நிலை லீக்கினில் விளையாடி வருகிறது. முதல் முறையாக இந்தியாவில் நடந்த கால்பந்து உலகக்கோப்பையான 17 வயதுக்குட்பட்டோரான ஃபிஃபா ஆண்கள் உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சஞ்சீவ் விளையாடி இருந்தார். அந்த போட்டி தொடரில் இந்தியா அடித்த ஒரே கோலுக்கு அசிஸ்ட் செய்த பெருமையும் இவரையை சாரும்.

இதற்கு முன்னதாக போர்ச்சுகல் முதல் நிலை லீக்கினில் விளையாடும் அணியான சி டி ஏவ்ஸ் அணியின் 23 வயதுக்கு உட்பட்டோர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கொரானா காரணமாக அந்த அணி பணக் கஷ்டத்தில் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 2017 முதல் 2019 வரை ஐ லீக் தொடரில் இந்தியன் ஏரோஸ் அணிக்காக ஆடி வந்தார் ஸ்டாலின். மற்ற இளம் வீரர்கள் போல ஐ எஸ் எல் தொடரில் ஆடாமல் துணிச்சலாக வெளிநாட்டு லீக்கினில் ஆட முடிவெடுத்தற்காக நிச்சயமாக இவரை பாராட்ட வேண்டும். பல பயிற்சியாளர்கள் மற்ற வீரர்களையும் இதேபோல் நடக்க அறிவுறுத்துவது குறிப்பிடத்தக்கது. இந்த அணியின் மூத்த வீரர்களான சுனில் சேத்ரி, குர்ப்ரித் சிங் சாந்து இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.