தாய்லாந்து தொடரில் அசத்தும் இந்தியாவின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை - அங்கிதா ரெய்னா!

Update: 2020-02-01 15:13 GMT

ஐடிஎஃப் தாய்லாந்து டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர்

பிரிவு போட்டியில், இந்திய டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னா இறுதிப்போட்டிக்கு

முன்னேறியுள்ளார். அதுமட்டுமின்றி, பெண்களுக்கான இரட்டையர் பிரிவு

இறுதிப்போட்டியையும் வென்று அசத்தியுள்ளார்.

இன்று நடந்த பெண்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில், நெதர்லாந்தின் பிபியானே சூவ்ஸ் உடன் இணைந்து விளையாடினார் அங்கிதா. இவர்களை எதிர்த்து தாய்லாந்தின் சவாங்கே - குயேரம் இணை போட்டியிட்டது. இதில், 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அங்கிதா - பிபியானே இணை இறுதிப்போட்டியை வென்றது.

இரட்டையர் பிரிவு போட்டியை வென்றது அடுத்து, நாளை நடக்க இருக்கும் ஒற்றையர்

பிரிவு இறுதி போட்டிக்கு தயாராகி வருகிறார் அங்கிதா. இந்த போட்டியில், பிரான்சின்

சோலோ பக்கெட்டை எதிர்த்து விளையாடுகிறார். இந்த போட்டி நாளை காலை 11:30 மணிக்கு

தொடங்குகிறது.

குஜராத்தைச் சேர்ந்த 27 வயதாகும் அங்கிதா ரெய்னா, பெண்களுக்கான ஒற்றையர்,

இரட்டையர் பிரிவுகளில் தற்போது இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனை. மேலும், உலக டென்னிஸ்

தரவரிசையில் 200 இடங்களுக்குள் நுழைந்த இந்திய வீராங்கனையாகவும் உள்ளார். இந்த

ஆண்டு, டாப் 100-க்குள் நுழைய வேண்டும் என்ற நோக்கில் விளையாடி வருகிறார்.