இந்திய தேசிய கால்பந்து அணியின் பயிற்சி முகாமிற்கு அழைக்கப்பட்டுள்ள தமிழக வீரர்கள்

Update: 2020-02-28 15:31 GMT

மார்ச் 26 அன்று ஒடிசாவில் நடக்கும் கத்தாருக்கு எதிரான, ஃபிஃபா உலகக்கோப்பை 2022 குவாலிஃபையர் ஆட்டத்திற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் பெருமைக்குரிய விஷயமாக தமிழகத்தை சேர்ந்த மூன்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியை சேர்ந்த மைக்கேல் சூசைராஜ், நெய்வேலியை சேர்ந்த எட்வின் சிட்னி வான்ஸ்பால், மற்றும் சென்னையை சேர்ந்த நந்தகுமார் சேகர் ஆகியோர். இவர்கள் மூவரும் நடந்து வரும் ஐஎஸ்எல் தொடரில் சிறப்பாக விளையாடி வருவதுன் பலனாக இந்திய அணியின் பயிற்சி முகாமிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். சூசைராஜ் ஏடிகே அணிக்காகவும், நந்தா ஒடிசா ஃஎப் சி அணிக்காகவும், எட்வின் சென்னையின் ஃஎப் சி அணிக்காகவும் விளையாடி வருகிறார்கள். எட்வின் இந்திய அணியின் பயிற்சி முகாமிற்கு முதல்முறையாக செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மூவரும் சென்னையில் நடக்கும் லீக்களில் ஆட தொடங்கி படிப்படியாக முன்னேறி இந்த நிலைக்கு வந்துள்ளனர். வளர்ந்து வரும் தமிழக கால்பந்து வீரர்களுக்கு இவர்கள் சிறந்த முன்னுதாரணமாக இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவர்கள் இந்திய அணிக்காக விளையாடி பெரிய சாதனைகள் படைக்க வேண்டும் என வாழ்த்துவோம்.