ஃபெட் கோப்பை டென்னிஸ் 2020: உஸ்பெகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி

Update: 2020-03-04 18:11 GMT

துபாயில் நடந்து வரும் ஃபெட் கோப்பை போட்டிகளின் இரண்டாம் நாளான இன்று, உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொண்டது இந்திய அணி. சானியா மிர்சா, அங்கிதா ரெய்னா, ருதுஜா போஸ்லே, ரியா பாட்டியா மற்றும் சவ்ஜனியா பாவிஷெட்டி ஆகியோரை கொண்டுள்ள இந்திய அணி நேற்றைய ஆட்டத்தில் சீன அணியுடன் தோல்விடைந்திருந்தது. அதனால் இன்றைய ஆட்டத்தினை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணிக்காக, முதல் ஆட்டத்தில் களமிறங்கிய ருதுஜா போஸ்லே அக்குல் அமன்முரடோவாவினை எதிர்கொண்டர். கடுமையான போரட்டத்திற்கு பின்னர் இந்த ஆட்டத்தில் ருதுஜா 2-6, 6-2, 7-5 என்ற கணக்கில் வென்று இந்த தொடரில் இந்தியாவிற்காக முதல் வெற்றியினை பதிவு செய்தார்.

அடுத்த ஆட்டத்தில் களமிறங்கிய இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான அங்கிதா ரெய்னா, சபினா ஷரிபோவாவினை எதிர்கொண்டு விளையாடி 7-5, 6-1 என்ற கணக்கில் சுலபமாக வெற்றி பெற்றார். இதன் மூலம் உஸ்பெகிஸ்தானுக்கெதிரான டைய்யினை கைப்பற்றியது இந்திய அணி.