ஃபெட் கோப்பை டென்னிஸ் 2020: சீன மகளிர் அணியுடன் தோல்விடைந்த இந்திய மகளிர் அணி

Update: 2020-03-03 17:18 GMT

துபாயில் தொடங்கிய ஃபெட் கோப்பையின் முதல் நாள் ஆட்டத்தில் பலம் வாய்ந்த சீன அணியினை எதிர்கொண்டது இந்திய மகளிர் அணி. இந்திய அணியில் சானியா மிர்சா, அங்கிதா ரெய்னா, ருதுஜா போஸ்லே, ரியா பாட்டியா மற்றும் சவ்ஜனியா பாவிஷெட்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முதலில் நடந்த ஒற்றையர் ஆட்டத்தில் ஷீவாய் ஷாங்கினை எதிர்கொண்டார் ருதுஜா போஸ்லே. இதில் அவர் 4-6, 2-6 என்ற புள்ளிகணக்கில் தோல்வியடைந்தார். அடுத்து களமிறங்கிய இந்தியாவின் சிறந்த வீராங்கனையான அங்கிதா ரெய்னா, கியாங் வாங்கினை எதிர்கொண்டார். முதல் செட்டினை 6-1 என வென்றிருந்தாலும் இறுதியில் 6-1, 2-6, 4-6 என தோல்வியடைந்தார். இதன்மூலம் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, அடுத்த போட்டியில் சைனீஸ் தைபே அணியை எதிர்கொள்கிறது