பாஜகவில் இணைகிறார் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா

Update: 2020-01-29 07:05 GMT

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பேட்மிண்டன் விளையாட்டில் மிகவும் பிரபலமானவர் சாய்னா நேவால். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

அத்துடன் பேட்மிண்டன் தரவரிசையில் நம்பர் இடத்தையும் சில நாட்கள் தன் வசம் வைத்திருந்தார். தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிப் பெறும் முன்னைப்பில் சாய்னா நேவால் உள்ளார். இந்நிலையில் அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கவுதம் காம்பீர், சந்தீப் சிங்,யோகேஷ்வர் தத், பாபிதா போகட் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். தற்போது அந்த வழியில் சாய்னா நேவாலும் புதுவரவாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சாய்னா நேவால், "நான் நாட்டிற்காக நிறையே பதக்கங்களை வென்றுள்ளேன். நான் பொதுவாக கடினமாக உழைக்கும் நபர். அதேபோல நமது நாட்டிற்காக பிரதமர் மோடியும் கடினமாக உழைக்கிறார். எனக்கு கடினமாக உழைப்பவர்களை பிடிக்கும். பிரதமர் மோடியிடம் இருந்து நான் பலவற்றை முன்னுதாரணமாக பார்க்கிறேன். நான் பிரதமர் மோடியுடன் இணைந்து நாட்டிற்கு எதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கு முன்பு சாய்னா நேவால் பாஜகவில் இணைந்துள்ளதால் டெல்லி தேர்தலுக்காக பிரச்சாரம் செய்வார் என்று கருதப்படுகிறது. சாய்னா நேவாலுடன் அவருடைய சகோதரி அபு சந்திரான்ஷூவும் பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.