2022 ஃபிஃபா உலகக்கோப்பை குவாலிஃபையர்ஸ்: கொல்கத்தாவில் நடக்கும் இந்தியா, ஆப்கானிஸ்தான் போட்டி

Update: 2020-03-02 16:27 GMT

இந்திய கால்பந்து அணியின் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2022 கத்தார் உலகக்கோப்பையின் குவாலிஃபையர் ஆட்டம், இந்திய கால்பந்தின் மெக்கா என்று அழைக்கப்படும் கொல்கத்தாவில் ஜீன் 9 நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்திற்கு முன்னதாக மார்ச் 26 அன்று புவனேஸ்வரில் நடக்கும் ஆட்டத்தில் கத்தாரை எதிர்கொள்கிறது இந்தியா. குவாலிஃபையர் இ க்ருப்பில், கத்தார், ஓமன், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுடன் உள்ளது இந்திய அணி. இதுவரை நடந்துள்ள 5 ஆட்டங்களில் வெறும் மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினமாகும். மீதமுள்ள 3 போட்டிகளில் அதிகப் புள்ளிகளை வென்றாக வேண்டிய கட்டாயம். இதற்கு முன்னதாக கொல்கத்தாவில் நடந்த பங்களாதேஷிற்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்திருந்தது.

இதனால் அடுத்து வரும் போட்டிகளுக்கு தீவிர பயிற்சி செய்ய அணியின் மேனேஜர் இகோர் ஸ்டிமாச் நேஷனல் முகாமினை அறிவித்துள்ளார். நடக்கவுள்ள அனைத்து போட்டிகளும் முக்கியமானது என்பதால் வீரர்கள் அனைவரும் கடுமையான பயிற்சி மேற்கொள்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.